பாகிஸ்தான் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தியது இலங்கை!

Date:

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது,

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெத்தும் நிசங்கவின் 55 ஓட்டங்களின் உதவியுடன் 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இவ்விரு அணிகளும் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...