‘பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்’: புத்தளத்தில் கருத்தரங்கு!

Date:

‘பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் அண்மைக்கால நெருக்கடிகளால் எவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை அறிந்துகொள்ளும் பொருட்டு புத்தள மாவட்ட சர்வமத குழுவின் பங்களிப்பில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இன்று புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள பிரதேச காரியாலயத்தில் கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் தேசிய சமாதான பேரவையின் முக்கியஸ்தரான சமன் செனவிரத்ன வளவாளராகக் கலந்துகொண்டு, இலங்கையில் எவ்வாறெல்லாம் தற்போது பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அதற்கான காரணங்கள் என்ன? குறிப்பாக இனவாதம் பொருளாதார வீழ்ச்சியின் பிரதான காரணியாக இருந்தமை உள்ளிட்ட விடயங்களோடு அதிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டெடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் என்ன என்பது பற்றிய விளக்கங்களுடன் அமைந்த பயிற்சிகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இதேவேளை கொவிட் காலத்திற்கு பிறகு இலங்கையில் பொருளாதாரத்தின் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ள நிலைமைகள், புத்தள மாவட்ட மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் போன்ற விடயங்களும் பிரதேசத்தில் உள்ள வாய்ப்புக்கள், வளங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இக்கருத்தரங்கில் மாவட்ட சர்வமத முக்கியஸ்தர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சமாதானப் பேரவையின் ரஸிகா செனவிரத்ன, DIRC யின் முஸ்னியா ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...