போசாக்கின்மை தொடர்பான விவாதத்தில் பதில் வழங்குவதற்கு பொறுப்பான எம்.பிக்கள் இல்லை!

Date:

நாட்டில் நிலவும் குழந்தைகளுக்கான போசாக்கின்மை நிலைமை தொடர்பான விவாதத்தின் போது பதில் வழங்குவதற்கு பொறுப்பான அமைச்சர்கள் எவரும் இன்று பிற்பகல் பாராளுமன்ற அலுவகத்தில் தங்கியிருக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்

சபை ஒத்திவைக்கப்பட்டபோது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விவாதம் தொடர்ந்தது.

இந்த விவாதத்திற்கான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன முன்வைத்தார்.

நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு பொறுப்பான அமைச்சர் இல்லை என்பது வேதனையான விடயம் என விவாதத்தின் இறுதியில் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பேசினர்.

போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகில் 6ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தது. யுனிசெப் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்தை கோரியிருந்தது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...