போசாக்கின்மை தொடர்பான விவாதத்தில் பதில் வழங்குவதற்கு பொறுப்பான எம்.பிக்கள் இல்லை!

Date:

நாட்டில் நிலவும் குழந்தைகளுக்கான போசாக்கின்மை நிலைமை தொடர்பான விவாதத்தின் போது பதில் வழங்குவதற்கு பொறுப்பான அமைச்சர்கள் எவரும் இன்று பிற்பகல் பாராளுமன்ற அலுவகத்தில் தங்கியிருக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்

சபை ஒத்திவைக்கப்பட்டபோது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விவாதம் தொடர்ந்தது.

இந்த விவாதத்திற்கான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன முன்வைத்தார்.

நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு பொறுப்பான அமைச்சர் இல்லை என்பது வேதனையான விடயம் என விவாதத்தின் இறுதியில் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பேசினர்.

போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகில் 6ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தது. யுனிசெப் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்தை கோரியிருந்தது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...