மத வழிபாட்டுத் தலங்களில் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியாது: எரிசக்தி அமைச்சர்

Date:

மத வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

அதேநேரம், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் இல்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று (20) பாராளுமன்றத்தில் மதஸ்தலங்களில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரச் சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், ஏனைய மின்சாரத் துறைகளின் கீழ் அதற்கான செலவை ஈடுகட்டுவதாகவும், இம்முறை மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பதில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அந்த முறையிலிருந்து விலகிச் சென்றதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை அதன்படி, விகாரைகளுக்கும் ஏனைய மத வழிப்பாட்டுத் தலங்களுக்கும் சூரிய சக்தியிலான மின் உற்பத்தி முறைமையை பயன்படுத்துவதற்கு திட்டமொன்றை வகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு சோலார் பேனல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த அமைச்சரிடம் கையளித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, கடன் முறையின் கீழ் சோலார் பேனல்களைப் பெறுவதற்கு சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...