மருந்து வாங்க விரும்புபவர் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘மெடி சர்ச்’ என அழைக்கப்படும் இந்த புதிய மொபைல் போன் அப்ளிகேஷனில், வாடிக்கையாளர்கள் தகவல்களை எளிதாகவும், இலவசமாகவும் பெற முடியும்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அனைத்து மருந்தகங்களிலும் அவை கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் மருந்துகளை வாங்குவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.