மறைந்த அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவேந்தல்!

Date:

இலங்கை  பாராளுமன்றத்தின் உறுப்பினராக அமைச்சராக நீண்ட காலம் பணிபுரிந்தவரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மொழி பெயர்ப்பாளரும் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின முன்னோடியுமான மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் மறைந்து 5 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் நேற்று 31 ஆம் திகதி அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்ச்சி முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுஹைர் முகமது ஹம்தல்லாஹ் செய்த் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர், அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நினைவுப் பேருரையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க வழங்கினார்.

இதேவேளை மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் நினைவாக தேவையுடைய சில மாணவர்களுக்கு புலைமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

-Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு...

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...