முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம்!

Date:

மறைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 63வது நினைவு தினம் இன்று (26) ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு மிகவும்  நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 22ஆவது நினைவு தினம் மற்றும் மறைந்த அமைச்சர் அநுர பண்டாரநாயக்கவின் 14ஆவது நினைவுதினமும் இங்கு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திஸாநாயக்க, குமார் வெல்கம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாண்டு பண்டாரநாயக்க, ஜீவன் குமாரதுங்க, பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்தோடு  பண்டாரநாயக்கவின் மகள்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க, கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...