மைத்திரிக்கு அதிக அதிகாரம்: சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

Date:

மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு சுதந்திர கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (02) வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் யாப்பு திருத்தம் அதன் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த திருத்தத்துக்கு கட்சியின் பல முக்கியஸ்தர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...