மைத்திரிக்கு அதிக அதிகாரம்: சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

Date:

மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு சுதந்திர கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (02) வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் யாப்பு திருத்தம் அதன் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த திருத்தத்துக்கு கட்சியின் பல முக்கியஸ்தர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...