வாழைச்சேனை உணவகங்களில் திடீர் சோதனை: நால்வர் கைது!

Date:

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக உணவு பாதுகாப்பு பரிசோதகர்கள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து வாழைச்சேனை பிரதேசத்தில் உணவகங்கள் மீது மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நான்கு நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பதினொரு உணவகங்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் நான்கு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் ஒவ்வொரு வழக்குக்கும் 6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

குறித்த திடீர் பரிசோதனையின் போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக உணவு பாதுகாப்பு பரிசோதகர்கள், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பரிசோதகர் இ.நிதிராஜ், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...