10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன!

Date:

மக்கள் சுமார் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரயில் இருக்கைகளை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் முந்தைய இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தினமும் காலை 10.00 மணிக்கு ரயில் இருக்கைகளுக்கான ஒன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்ட பிறகு, இருக்கை முன்பதிவு சுமார் 10.10 மணிக்கு முடிவடைகிறது என்றும், அதன்படி இருக்கை முன்பதிவுக்கான 14 நாட்கள் அவகாசம் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி கூறினார்.

முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டிய ரயில் இருக்கைகளில் 60 சதவீதம் ஆன்லைனிலும், 40 சதவீதம் ரயில் நிலையத்திலும் கிடைக்கும் என்றும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக உள்ளதால், ஏ.டி. ரயில்களுக்கான வலுவான தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...