22ஆவது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை; உயர் நீதிமன்றம்

Date:

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபையில் அறிவித்தார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே சபாநாயகர் இதனை அறிவித்தார்.

இதன்படி, அரசியலமைப்பு திருத்த வரைவை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பு அல்லது சம்பந்தப்பட்ட சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்துள்ளது.

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் வரைவு அரசியலமைப்பின் 120 (1) (1) இன் படி உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி  அறிவித்தது.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...