22ஆவது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை; உயர் நீதிமன்றம்

Date:

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபையில் அறிவித்தார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே சபாநாயகர் இதனை அறிவித்தார்.

இதன்படி, அரசியலமைப்பு திருத்த வரைவை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பு அல்லது சம்பந்தப்பட்ட சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்துள்ளது.

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் வரைவு அரசியலமைப்பின் 120 (1) (1) இன் படி உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த குழாம், தனது முடிவுகளை சபாநாயகருக்கு சமர்பிப்பதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி  அறிவித்தது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...