SLFPயின் 71 வது வருட பூர்த்தி இன்று!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 வது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யு ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் கொழும்பு நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய வருட பூர்த்தி நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த வருட பூர்த்தி நிகழ்வின் போது, கட்சியின் யாப்பு திருத்தப்படவுள்ளது.

இதற்காக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மத்திய செயற்குழுவில் அனுமதி கிடைக்கப்பெற்ற கட்சியின் யாப்பு திருத்த யோசனை அந்த செயற்குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

தற்போது நான்காகவுள்ள சிரேஷ்ட உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக அதிகரிக்கவும், 10 ஆகவுள்ள உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புதிய திருத்தம் ஊடாக சிரேஷ்ட உப தவிசாளர்கள், உப தவிசாளர்கள், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோரை பதவி விலக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...