அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

Date:

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை எதிர்வரும் காலங்களில் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், சில நிறுவனங்களின் சேவைகளை பேணுவதற்கு தேவையில்லாத திணைக்களங்களில் இருந்து ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரி குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நிலவும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சேவையை மேலும் முறையாகவும் திறமையாகவும் உயர் மட்டத்தில் பராமரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் உள்ள  பணியிடங்கள் மற்றும் மிகுதிகளைக் கணக்கிட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சமப்படுத்தப்படும்.

இதேவேளை கடந்த காலங்களில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சுமார்  60,000 அரச ஊழியர்களுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...