இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடமிருந்து செய்தி!

Date:

சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா டுவீட் செய்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில், சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது இலங்கை முன்னோக்கி செல்வதற்கு முக்கியமான ஒரு படியாகும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் ஆகஸ்ட் 31 அன்று உத்தியோகப் பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவான நிதி வசதிகள் வழங்கப்படும்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...