எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி இங்கிலாந்து பயணம்!

Date:

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார்.

இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி 17 அல்லது 18 ஆம் திகதி கிரேட் பிரிட்டனுக்கு செல்லவுள்ளார். எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் பிரித்தானிய மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

1952 மற்றும் 1972 க்கு இடையில், ராணி இரண்டாம் எலிசபெத் காமன்வெல்த் தலைவராகவும் இலங்கை ராணியாகவும் இருந்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...