ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு ஆரம்பம்: இலங்கை மீதான விவாதம் இன்று

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வு இன்று (செப்டம்பர் 12) ஆரம்பமாகி, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும், இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

உள்ளூர் மனித உரிமைகள் நிலைமை பற்றிய விரிவான அறிக்கைக்கு கூடுதலாக 46/1 தீர்மானத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு நடத்தப்படும்.

ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் இந்த அமர்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...