சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக ஜாபரி தெரிவு

Date:

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹபீப் ஸாலிம் ஸக்காப் அல் ஜாபரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மேற்கு சஹாரா பிராந்தியம் தொடர்பில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் ரைஸூனி கடந்த மாதம் பதவி விலகியிருந்த நிலையில் ஜனவரியில் நடைபெறவுள்ள தலைவர் தேர்வு வரையிலான காலப்பகுதிக்கு ஜாபரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மொரிடானியாவும் மொரோக்கோவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என தொலைக்காட்சி நேர்காணலொன்றில் ரைஸூனி தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து அவர் பதவி விலகினார். இடைக்காலத் தலைமைப் பதவியை ஏற்றுள்ள ஜாபரி ஷரீஆத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.

இந்தோனேஷியப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர் இந்தோனேஷிய அரசாங்கத்தில் சமூக விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...