தாமரை கோபுரம் மூன்று கட்டங்களாக பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது!

Date:

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தாமரை கோபுரம் திறக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் 15-ம் திகதி முதல் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே திறக்கப்படவுள்ளது.

கண்காணிப்பு தளம் மற்றும் கோபுரத்தின் சில பகுதிகள் இந்த வாரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

டிக்கெட்டுகள் சுமார் ரூ. 2000 மற்றும் ரூ. 500 ஆகும். இதற்கிடையில் பாடசாலை சுற்றுலாக்களுக்கு சிறப்பு கட்டணங்கள் பரிசீலிக்கப்படும்.

இந்த கோபுரம் வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோபுரம் மூடப்பட்டால் கூடுதல் இழப்பு ஏற்படும் என்று நிறுவனம் நம்புகிறது. இ-ஸ்போர்ட்ஸ் மையங்கள் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய கோபுரத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

சுழலும் உணவகம் மற்றும் 9னு திரையரங்கம், பெரும்பாலான உள்ளூர்வாசிகள் பார்வையிட எதிர்பார்க்கும் ஒன்று, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்படும்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...