‘நாட்டில் தேர்தல் நடைமுறைகளில் ஊழல் நிறைந்துள்ளது’

Date:

இந்த நாட்டில் தேர்தல் நடைமுறைகள் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் பலவீனமாகவும் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகளில் உள்ளக ஜனநாயகம் உள்ளதா? என்ற கேள்வி எமக்கு இருப்பதாகத் தெரிவித்த தலைவர், சில அரசியல் கட்சிகளில் அதிகாரம் ஒரே இடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச ஜனநாயக தினக் கொண்டாட்டம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற போதே புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிலர் தேர்தலில் பெரும் தொகையை செலவு செய்கிறார்கள், ஆனால் சில வேட்பாளர்கள் சுவரொட்டி கூட ஒட்ட முடியாது, தேர்தலில் பணம் செலவழித்தவர்களிடம் நெருக்கமும் அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் பணச் செலவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்றும் அதற்காக செலவீனக் கட்டுப்பாட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழலில் ஈடுபடும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும், ஆனால் அதனை கட்டுப்படுத்தும் திறன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...