பாகிஸ்தான் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தியது இலங்கை!

Date:

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது,

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெத்தும் நிசங்கவின் 55 ஓட்டங்களின் உதவியுடன் 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இவ்விரு அணிகளும் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...