பாகிஸ்தான் அணியை 5 விக்கட்டுக்களினால் வீழ்த்தியது இலங்கை!

Date:

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது,

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெத்தும் நிசங்கவின் 55 ஓட்டங்களின் உதவியுடன் 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இவ்விரு அணிகளும் ஏற்கனவே தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...