போராட்டத்தில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்ணுக்கு நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவு!

Date:

போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டமைக்கு எதிராக பிரித்தானிய பிரஜையான கெல்லி பிரஸ்ஸர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபாவை நீதிமன்றத்தில் செலுத்துமாறு இன்று (14) உத்தரவிட்டார்.

அட்டரனி ஜெனரல் முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டு, இந்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான நீதிமன்ற கட்டணத்தை நீதிமன்றத்திற்கு செலுத்த உத்தரவிட்டது.

குறித்த மனு எஸ். துரைராஜா, புவனேகா அலுவிஹாரே மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (14) இந்த அடிப்படை உரிமைகள் கோரப்பட்டது.

லக்ஷான் டயஸ் தாக்கல் செய்த இந்த மனுவில், குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் உண்மைகளை மறைத்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...