மைத்திரிக்கு அதிக அதிகாரம்: சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

Date:

மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு சுதந்திர கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (02) வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் யாப்பு திருத்தம் அதன் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த திருத்தத்துக்கு கட்சியின் பல முக்கியஸ்தர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...