இலங்கை தொடர்பான தீர்மானத்தில் கையொப்பமிடப் போவதில்லை: துருக்கி!

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் தாங்கள் கையொப்பமிடப் போவதில்லை என்றும், முன்னர் வெளியிடப்பட்ட அனுசரணையாளர்களின் பட்டியல் துல்லியமானது அல்ல என்றும் துருக்கியத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான துருக்கியத் தூதுவர், டெமெட் செகெர்சியோக்லு, கடந்த காலத்திலும் சரி, 51ஆம் ஆண்டிலும் சரி, UNHRC இல் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானத்திற்கும் துருக்கி இணை அனுசரணை வழங்கவில்லை.

மேலும், சபையின் 51வது அமர்வின் போது 12 செப்டம்பர் 2022 அன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான உரையாடலில் துருக்கி தலையீடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்களின் மகத்தான தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த கடினமான காலங்களில் இலங்கை அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று துருக்கிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானம் ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளால் அனுசரணையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...