இலங்கை விமானப்படையினால் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில் செயல்திட்டம்!

Date:

2030 ஆம் ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை 27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில்  வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் இலங்கை விமானப்படையினரினால் கடந்த 29 அன்று சியாம்பலா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப்பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

வீரவெல இலங்கை விமானப்படை தளத்தை மையமாக கொண்டு இல. 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகாப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைகுண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன் , வேம்பு , ஆத்தி , நாகை , புளி , பருத்தி , பாலை , வீரை , மருது , கித்துள் உட்பட 100,000 விதைகள் தாயரிக்கப்பட்டு வான் வழிமூலம் தெளிக்கப்பட்டன

இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் , பேராதெனிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...