‘உணவு விஷம் காரணமாக’ 22 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

புத்தல , பெல்வத்த ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 22 சிறுவர்கள் உணவு விஷம் காரணமாக இன்று (ஒக்டோபர் 5) வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

காலை உணவை உட்கொண்டதன் பின்னர் குழந்தைகளின் தோல் அரிப்பு மற்றும் தோல் வெடிப்பு மற்றும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.

எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லையெனவும், இது தொடர்பான ஆரம்ப சுகாதார பரிசோதனைகளை புத்தல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...