உலகிலேயே ‘குறைந்த பாதுகாப்பு’ கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான்!

Date:

உலகிலேயே பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நாடு இடம்பிடித்துள்ளது.

Gallup’s Law and Order Index இன் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் கணக்கெடுப்பு மதிப்பீடு செய்யப்பட்டது.

அதற்கமைய மக்கள் தங்கள் சமூகங்களில் எப்படி பாதுகாப்பாக உணர்கிறார்கள் அல்லது எவ்வாறு தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்ற அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதையடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு 51 மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்றன.

தலிபான் ஆட்சியில் பல மனித உரிமை மீறல்கள் நடப்பதால், குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வறிக்கையில் சிங்கப்பூர் 96 மதிப்பெண்களுடன் பாதுகாப்பான நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பு அடிப்படையில், 120 நாடுகளை அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த கணக்கெடுப்பின்படி, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இரவில் தனியாக நடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக உணரும் நிலைமை குறைவாக காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, நாடு தழுவிய பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான நெருக்கடியால் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்துள்ளது.

பயங்கரவாதச் செயல்கள், கொலைகள், குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்கள், பொதுமக்களை இடைவிடாது படுகொலை செய்தல், மசூதிகள் மற்றும் கோயில்களை அழித்தல், பெண்களைத் தாக்குதல் மற்றும் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டுதல் போன்ற மனித உரிமை மீறல்களுடன் வழக்கமான விவகாரமாகிவிட்டன.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு பதிலளிப்பதற்கான அமைப்பை தலிபான் சிதைத்தார்கள், பெண்கள் சுகாதார சேவையை அணுகுவதற்கு புதிய தடைகளை உருவாக்கினர், பெண்கள் உதவி பணியாளர்கள் தங்கள் வேலைகளைச் செய்வதைத் தடுத்தனர் உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...