கொழும்பில் நீர்வெட்டு இல்லை!

Date:

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) அமுல்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர்விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

முன்னதாக, அத்தியாவசிய திருத்தப் பணிகள் நிமித்தம் இன்றிரவு 10 மணி முதல், நாளை (23) மதியம் 12 மணிவரை கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு 02 தொடக்கம் கொழும்பு 10 வரை சுமார் 14 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படவிருந்த நீர்விநியோகத் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பின் 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...