சபாநாயகர் பதவி எங்களுக்கும் வேண்டும்:பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்

Date:

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளில் நியமிக்க இடஒதுக்கீடு உருவாக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது.

அதேநேரம், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பெண்களை உள்ளடக்கி புதிய ஒதுக்கீட்டை உள்ளடக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கூடிய போது மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கிடையில், பாலின சமத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு என்ற கண்ணோட்டத்தில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்  சமீபத்தில் கேள்வி எழுப்பியது.

 

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...