நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர்!

Date:

அரசாங்கம் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையான நடுத்தர வர்க்க மக்கள் தற்போது குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ளும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வருமான நிலைமையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னைய பொருளாதார நிலைமைகளை மக்கள் அடைய முடியவில்லை எனவும் மக்கள் தங்களின்பொருளாதார நிலைகளில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக அரசாங்கம் சிறந்த கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இந்திரஜித் அபோன்சு மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...