நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர்!

Date:

அரசாங்கம் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையான நடுத்தர வர்க்க மக்கள் தற்போது குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ளும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வருமான நிலைமையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னைய பொருளாதார நிலைமைகளை மக்கள் அடைய முடியவில்லை எனவும் மக்கள் தங்களின்பொருளாதார நிலைகளில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக அரசாங்கம் சிறந்த கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இந்திரஜித் அபோன்சு மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...