நாட்டின் நிலைமைகள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

Date:

நாட்டின் பொருளாதாரம் உட்பட நாட்டின் நிலை குறித்து எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த பிரேரணை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை விவாதம் நடைபெறும்.

அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை கேள்வி கேட்கும் அமர்வு நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (27) முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதேவேளை, வரிச் சட்டமூலங்கள் மீதான விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்தேகம சமித்த தேரர், டி.பி.ஏக்கநாயக்க, சந்திரகுமார விஜேகுணவர்தன, மற்றும் எஸ். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்னசிங்கம் அவர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி இரங்கல் விவாதம் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...