நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!

Date:

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவின்மை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவின்மையே இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என போஷாக்குக்கான விசேட செயலணியின் உறுப்பினர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

அந்த நிலையைத் தவிர்ப்பதற்காக அதிக ஆபத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏற்கனவே ஒரு முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஜீ.விஜேசூரிய இங்கு தெரிவித்தார்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என வைத்தியர் தெரிவித்தார்.

மேலும், தற்போது நாட்டில் மந்தபோஷண நிலைமை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஒரு குடும்பத்தில் தாய்,தந்தை, ஒரு பிள்ளை இருப்பார்களாயின் அவர்கள் நாளொன்றுக்கு வழங்கப்படும் உணவின் அளவு, எவ்வாறான உணவுகள் வழங்கப்படவேண்டும், அந்த உணவிற்காக வாரத்திற்கு எவ்வளவு செலவிடப்படுகின்றது என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

மேலும், கண்டி, மாத்தறை, நுவரெலியா போன்ற மாவட்டங்களை முதலில் தேர்ந்தெடுத்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

தற்போது ஊட்டச்சத்து குறைபாட்டினை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்காக வேறு தனியார் குழுக்களைசேர்த்து முன்னெடுத்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...