பாண் விலையை குறைப்பது எப்படி என்று கூறுகிறார் பேக்கரி சங்கத்தின் தலைவர்!

Date:

இலங்கையில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால், ஒரு பாண் இறாத்தலின் விலையை 20 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவில் இருந்து 265 ரூபாவாக குறைக்கப்பட்டாலும் பாண் மற்றும் பன்களின் விலையை குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ மாவை 250 ரூபாவிற்கு இலகுவாக வழங்க முடியும் என்ற நிலையில் இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை அதிகரிப்பது மிகவும் அநியாயமானது எனவும் அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்களை நசுக்குவதாகவும் ஜயவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைப்பதற்கு அரசாங்கத்தின் தலையீடு நிச்சயம் தேவை எனவும், இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 320 மற்றும் 285 ரூபாவிற்கு விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்டி வருவதாகவும் ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...