‘பொடி மைனா’ என்று அழைப்பதில் தனக்கு மகிழ்ச்சி: நாமல்

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணைய வசதியை பயன்படுத்தி தன்னை ‘பொடி மைனா’ என அழைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இணையத்தில் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் அவரை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிக்கின்றனர்.

மேலும் மக்கள் மஹிந்த ராஜபக்சவின் மகனாக ஏற்றுக்கொண்டதால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

2005 இல் 5வீத மக்களுக்கு மட்டுமே இணைய வசதி இருந்தது. மகிந்த ராஜபக்ச அறிமுகப்படுத்திய இணையத்தை பயன்படுத்தி  இன்று மக்கள் அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்க பயன்படுத்துகின்றனர்.

மேலும் ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகிற்கு விசுவாசமாக இல்லை. அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை.

அதேநேரம் இனி மனித உரிமைகள் பற்றி பேசவில்லை. கோட்டாபய ராஜபக்ச மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தார் ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஒன்று திரண்டிருந்மத காலி முகத்திடலை துடைத்தெறிந்தார் எனவும் நாமல் குற்றம்சாட்டியிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...