பொருளாதார நெருக்கடியால் மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறுகின்றனர்!

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய ஆய்விலே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதுவும் பெருந்தோட்டத் துறையில் உள்ள குடும்பங்களின் மாணவர்கள், கல்வியை பாதியிலேயே நிறுத்திவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன 11 மாவட்டங்களில் 2,871 குடும்பங்கள் மற்றும் 300 தோட்டத்துறை குடும்பங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதத்தினர் தங்கள் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் அபாயம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் சமூக பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேர்காணல் செய்யப்பட்ட 2,871 குடும்பங்களில், 34 சதவீத குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 60 சதவீதம் பேர், தமது பிள்ளைகள் தொடர்பில் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

2020ஆம் ஆண்டில், பாடசாலைகள் மூடப்பட்டமையால், ஆசிரியர்களால் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் தினசரி பாடசாலைகளுக்கு செல்ல முடியாமல் பல சந்தர்ப்பங்களில் பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இலங்கை சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவது அனைவருக்கும் கட்டாயமாகும்.

அத்துடன் 18 வயதுக்குட்பட்டவர்கள் மாணவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

இதேவேளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பெருந்தோட்டங்களில் உள்ள 300 குடும்பங்களில் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...