மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மேலதிகமாக 4 பில்.ரூபா ஒதுக்கீடு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, தற்போது மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர் குழுவிற்கு மேலதிகமாக மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பூரண சத்தான உணவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர்  தெரிவித்தார்.

வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் தேவையான நிதியை வழங்குவதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஒதுக்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பந்துல  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...