மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்டவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினரால் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசியமான பொருட்கள் இன்று (09) பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களால் இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினர், கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ், அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் உட்பட பௌத்த மதகுருவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டிலும் முஅஸ்கர் நிர்வாகத்தினரால் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர்...

மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள்!

நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில்...

ஆக்கபூர்வமான கலந்துரையாடலுடன் நடைபெற்ற புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுக்கூட்டம் .

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுக்கூட்டம் நேற்று (09) காலை 9...

2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுசமா கிடாகவா, ரிச்சர்ட்...