வரகாபொல மண்சரிவிலிருந்து இரண்டாவது சடலம் மீட்பு!

Date:

வரகாபொல மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

24 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மகனுடைய சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் இந்தப் பெண்ணின் இரண்டாவது மகன் மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்ற வேளையிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் தற்போது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...