அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் இன்று நாட்டுக்கு!

Date:

பல அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உதவிகள் இன்று நாட்டை வந்தடைகின்றன.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் மூலம், இலங்கை அதே மருந்துப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் இலவசமாகப் பெறுகின்றது.

அந்த மனிதாபிமான அமைப்புகளால் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு 04 மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த 04 மருந்துப் கையிருப்புகளின் மொத்தப் பெறுமதி சுமார் 4.6 பில்லியன் ரூபா என வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவிகளைப் பெறுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...