ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!

Date:

வடக்கு அந்தமான் கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (21) உருவாகி அதே பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது

இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஒக்டோபர் 22ஆம் திகதியன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இது ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஒக்டோபர் 24 ஆம் திகதி சூறாவளியாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, படிப்படியாக வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25-ம் திகதி மேற்கு வங்கம் மற்றும் பங்காளதேஷ் கடற்கரைக்கு அருகே சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது, காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ ஆக இருக்கும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கலாம்.

கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...