இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 435 கொலைச் சம்பவங்கள்!

Date:

இலங்கையில் இவ்வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையில் 521 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது மிகப் பெரிய எண்ணிக்கையிலான உயர்கள் பலியாகியுள்ளதாக கூறிய அமைச்சர், ஒவ்வொரு குடிமகனுக்கும் கௌரவமான மரணம் கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் கூறினார்.

இந்த குற்றவாளிகளின் சாட்சியங்கள் விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெறுவதாகவும், தற்போதுள்ள சட்ட நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளில் விசாரணைகளை நடத்துவது தொடர்பில் பொருத்தமான திருத்தங்களை அடையாளம் காண பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...