நூலாசிரியர் அப்துர் ரஹ்மான் முபாரக் பூரி அவர்கள் எழுதிய அர்ரஹீக் அல் மக்தூம் நூல் உலகளவில் மிகவும் பிரபல்யமான நூலாகும். நூறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்பதும் பல கலாசாலைகளின் பாட நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நபிகளார் பிறந்த மாதத்தில் அன்னாரை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டிய தேவை அதிகம் காணப்படுகின்றது. அதனை நிறைவேற்றி வைக்க எடுக்கப்பட்டுள்ள பெரு முயற்சியே இது When the moon split (සඳ දෙකඩ සඳ) எனும் நூல் சகோதர சிங்கள மொழியில் மொழிமாற்றம் பெற்று இன்று வெளியிட்டு வைக்கப்படுகிறது.
நபியவர்களது வாழ்வியல் மற்றும் வரலாறு அற்புதமானது. உலக ஆளுமைகள் வரிசையிலும், வரலாறு படைத்தவர்கள் வரிசையிலும், வரலாற்றின் திருப்பத்தின் திசையை மாற்றியவர்கள் வரிசையிலும் பிரதான பன்முக ஆளுமை கொண்டவர்கள் என்றும அல்லாஹ் அவர்களை உயர்த்திப் பேசிகின்றான்.
அன்பு நபிகளார் செய்த தியாகம், அர்ப்பணம், சாதனை அளப்பரியது. இந்நூலில் அதனைக்காணலாம் ரஹீக்கின் போக்கும் உள்ளடக்கமும் போலன்றி முழுவதுமாக நபிகளாரின் வாழ்வியலாக இந்நூல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள இலக்கிய தளத்தில் ஈடுபாடுமிக்க 16 க்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்த சமன் புஷ்ப லியனகே (Saman puspa Liyanage) எனும் கைதேர்ந்த மொழியியல் விற்பண்ணர் When the moon split எனும் ஆங்கில நூல் வழியாக இந்நூலை அழகுற மொழி பெயர்த்துள்ளார்.
1886களில் எழுதப்பட்ட 5 அங்கங்களை உள்ளடக்கிய Leo Tolstoy இன் The Power of Darkness நாடகத்தையும் 2015 களில் ක්රීරු අඳුර எனும் பெயரில் சிங்களத்தில் மொழிபெயரத்துள்ளார்.1902 வரை இது ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Maxim Gorky யின் Tales of Italy ஐ ඉතාලි කතා எனும் பெயரில்
2018 ல் மொழிமாற்றம்செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.