இறைத் தூதரை அறிமுகம் செய்யும் ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) சிங்கள மொழி நூல் வெளியீட்டு விழா கொழும்பில்!

Date:

2022 மீலாதுன் நபியை முன்னிட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பிரபல எழுத்தாளர் சமன் புஸ்ப லியனகே அவர்களினால் இந்த புத்தகம் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

பஹன மீடியா நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில்  இடம்பெறவுள்ளது.

இதேவேளை நிகழ்வில் கொழும்பு மாவட்ட உதவி கல்வி பணிப்பாளர் கரவில கொட்டுவ தம்மாதிலக்க தேரர் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

‘நியூஸ் நவ்’ இணையத்தளம் இந்நிகழ்ச்சிக்கான ஊடக அனுசரணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...