இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வேலைகளை வழங்கும் ருமேனியா!

Date:

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்கள் எதிர்காலத்தில் ருமேனியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் இணைவதற்கான தொழில்வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியூடியா தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (07) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இலங்கைக்கான ருமேனிய தூதுவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் ருமேனியாவில் அதிகளவில் முதலீடு செய்து வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த திறமையான தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் ரோமானிய நிறுவனங்களில்  தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கலாம் என்றார்.

உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஒரு பரிமாற்ற விஜயத்தின் கீழ், இலங்கை கல்வியாளர்கள் குழு விரைவில் ருமேனியாவுக்குச் செல்லவுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் குணவர்தன மற்றும் ருமேனிய தூதுவர் கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ருமேனியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த பிரதமர், இலங்கைக்கு வழங்கப்பட்ட ருமேனிய ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் குறித்து விசேடமாக குறிப்பிட்டார்.

இலங்கையுடன் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக தமது நாடு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும், இதன் மூலம் வர்த்தகச் செயற்பாடுகள் சுமூகமாக இருக்கும் எனவும் தூதுவர் விக்டர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...