இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டம்: முதல் பழங்கள் ஜனாதிபதிக்கு

Date:

இலங்கையின் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் பழங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (ஒக்டோபர் 20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லக்ஷ்மன் குமார காமியின் கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஆப்பிள் தோட்டத்தை பார்வையிட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிள் விதை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டு பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இரண்டு ஏக்கர் வளமான பழங்கள் கிடைத்துள்ளதாகவும் லக்ஷ்மன் குமார   தெரிவித்துள்ளார்.

இந்த பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்த தேவையான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும் இலங்கையில் எந்த பிரதேசத்திலும் பயிரிடக்கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில்  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச மற்றும் அசங்க லயனல் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...