இளைஞர்களிடையே வேகமாக பரவும் எச்.ஐ.வி தொற்று: மருத்துவ நிபுணர்

Date:

எச்.ஐ.வி தொற்று இப்போது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே பரவுகிறது, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இதுபோன்ற 50 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

16 பல்கலைக்கழக மாணவர்களும் மூன்று பாடசாலை மாணவர்களும் பதிவான வழக்குகளில் அடங்குவதாக  அவர் கூறினார்.

இலங்கையில் சுமார் 2,350 பேர் எச்.ஐ.விக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சமூகத்தில் சுமார் 3,750 எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் பாலியல் கல்வியின்மை காரணமாக இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

“எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் இரண்டும் வெவ்வேறு நோய்கள். இலங்கையில் எச்.ஐ.வி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நீண்டகாலமாக சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது. இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையினாலும், குழுவாக கலந்துகொள்ளும் விருந்துகள் போன்ற சமூக நிகழ்வுகளினாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...