ஈரான் பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்!

Date:

ஈரானின் இரண்டாவது புனிதத் தலமான ஷிராஸ் நகரில் உள்ள ஷியா மசூதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு “தக்ஃபிரி பயங்கரவாதிகள்” காரணம் என அந்நாட்டு அரசு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாவும், அரசுத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவன் தப்பியோடி விட்டதாகவும், ஈரான் நீதித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தக்ஃபிரி” என்றால் ஐ.எஸ். அமைப்பு போன்ற கடும்போக்கு சன்னி முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு டெஹ்ரான் என்பது பெயர்.

ஈரானின் பாராளுமன்றம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கொமெய்னியின் கல்லறையை குறிவைத்து 2017 இல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு உட்பட ஈரானில் முந்தைய தாக்குதல்களுக்கு இந்த குழு பொறுப்பேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பொலிஸ் காவலில் இருந்த 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினியின் 40 வது ஆண்டு நினைவு நாளில் ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதியதில் இந்த ஷியா யாத்ரீகர்கள் நேற்று கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த காலங்களில், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஷியா பிரிவினரின் புனித தலங்களை குறி வைத்து,  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் தற்போது நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...