‘உங்களைப் போல் நாங்கள் போரில் ஈடுபடவில்லை’ :ஜோ பைடனுக்கு பதிலளித்த இம்ரான் கான்

Date:

அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. எங்களிடம் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு உள்ளது” என  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பிரசாரக்குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டார். அப்போது பிற நாடுகள் உடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அவர் விளக்கமளித்தார்.

அப்போது பேசிய பைடன் , “எனது பார்வையில் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. எந்த வகையான ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது” எனக் கூறினார்.

அவரின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளர்.

ஜோ பைடனின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. எங்களிடம் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...