‘உங்களைப் போல் நாங்கள் போரில் ஈடுபடவில்லை’ :ஜோ பைடனுக்கு பதிலளித்த இம்ரான் கான்

Date:

அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. எங்களிடம் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு உள்ளது” என  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற பிரசாரக்குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டார். அப்போது பிற நாடுகள் உடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து அவர் விளக்கமளித்தார்.

அப்போது பேசிய பைடன் , “எனது பார்வையில் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. எந்த வகையான ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்துள்ளது” எனக் கூறினார்.

அவரின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளர்.

ஜோ பைடனின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அமெரிக்காவை போல நாங்கள் போரில் ஈடுபடவில்லை. எங்களிடம் பாதுகாப்பான அணு சக்தி கட்டுப்பாடு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...