உயர்தர திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும்:சுகாதார அமைச்சர்

Date:

இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ மாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான உண்மைகளை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கு இவ்வாறான ஊட்டச் சத்துக்களை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கு தேவையான அதிகபட்ச ஒதுக்கீடு திறைசேரியிலிருந்து ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரிபோஷாவுக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு மேலதிகமாக சில தனியார் நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் திரிபோஷ திட்டத்தில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை என்றும், உணவு பணவீக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...